பொங்கல் திருநாள் புகைப்படப் போட்டி

பொங்கல் திருநாள் புகைப்படப் போட்டி

விதிமுறைகள்

 

  1. இப்போட்டியில் அனைத்து மலேசியர்களும் வயது வரம்பின்றி பங்கேற்கலாம்.
  2. இப்போட்டியில் குழு வாரியாகப் பங்கெடுக்க வேண்டும்.
  3. ஒவ்வொரு குழுவிலும் குடும்பத்தின் அடிப்படை உறுப்பினர்கள் கட்டாயம் இருத்தல் வேண்டும். (எடுத்துக்காட்டு: தாத்தா / பாட்டி, அப்பா / அம்மா, அக்கா / அண்ணன், தம்பி / தங்கை).
  4. தங்கள் இல்லத்தில் கொண்டாடப்படும் பொங்கல் திருநாளைப் புகைப்படம் எடுத்து, முகநூலில் பதிவேற்றம் செய்ய வேண்டும்
  5. போட்டியாளர்கள் கட்டாயம் தமிழ் அறவாரியம் முகநூல் பக்கத்தைத் தங்களின் பதிவில் இணைக்க (TAG) வேண்டும். 

    குறிப்பு : தமிழ் அறவாரியம் முகநூல் பக்கம்   (  https://www.facebook.com/tamilfound/   )

  6. ஒரு குழு குறைந்தபட்சம் மூன்று, அதிகப்பட்சம் ஐந்து புகைப்படங்கள் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
  7. போட்டியின் இறுதி நாள்: 01.02.2022

 

பரிசுத் தொகை

சிறந்த மூன்று குழுவினருக்குப் பரிசுத் தொகையும் நற்சான்றிதழும் வழங்கப்படும்.

 

மேல் விவரங்களுக்கு:

இரகுநாதன் குப்புசாமி – 01116506258

இராஜ்குமார் பரமசிவம் - 0172516467

OUR SPONSORS

Style Switcher

Select Layout
Chose Color
Chose Pattren
Chose Background