பொங்கல் திருநாள் புகைப்படப் போட்டி
2022-02-27
15
25
பொங்கல் திருநாள் புகைப்படப் போட்டி
விதிமுறைகள்
- இப்போட்டியில் அனைத்து மலேசியர்களும் வயது வரம்பின்றி பங்கேற்கலாம்.
- இப்போட்டியில் குழு வாரியாகப் பங்கெடுக்க வேண்டும்.
- ஒவ்வொரு குழுவிலும் குடும்பத்தின் அடிப்படை உறுப்பினர்கள் கட்டாயம் இருத்தல் வேண்டும். (எடுத்துக்காட்டு: தாத்தா / பாட்டி, அப்பா / அம்மா, அக்கா / அண்ணன், தம்பி / தங்கை).
- தங்கள் இல்லத்தில் கொண்டாடப்படும் பொங்கல் திருநாளைப் புகைப்படம் எடுத்து, முகநூலில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
-
போட்டியாளர்கள் கட்டாயம் தமிழ் அறவாரியம் முகநூல் பக்கத்தைத் தங்களின் பதிவில் இணைக்க (TAG) வேண்டும்.
குறிப்பு : தமிழ் அறவாரியம் முகநூல் பக்கம் ( https://www.facebook.com/tamilfound/ )
- ஒரு குழு குறைந்தபட்சம் மூன்று, அதிகப்பட்சம் ஐந்து புகைப்படங்கள் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
- போட்டியின் இறுதி நாள்: 01.02.2022
பரிசுத் தொகை
சிறந்த மூன்று குழுவினருக்குப் பரிசுத் தொகையும் நற்சான்றிதழும் வழங்கப்படும்.
மேல் விவரங்களுக்கு:
இரகுநாதன் குப்புசாமி – 01116506258
இராஜ்குமார் பரமசிவம் - 0172516467