தமிழ்ப்பள்ளி ஆய்வு & மேம்பாட்டு பணிகளைத் தமிழ் அறவாரியம் தொடர்ந்து தனது தலையாயப் பணியாக மேற்கொண்டு வருகின்றது. தமிழ்ப்பள்ளிகள் எதிர்நோக்கியுள்ள சவால்கள் குறிப்பாகக் குறைந்த மாணவர்கள் சார்ந்த புள்ளி விவரங்கள் சேகரிக்கப்பட்டு தமிழ்ப்பள்ளி பங்குதாரர்களுக்கும் இந்திய சமுதாயத்தினருக்கும் ஆய்வு கட்டுரைகளின் மூலம் தெரிவிக்கப்பட்டு வருகின்றது. நெ.செ. ரீஜண்ட் தோட்டத் தமிழ்ப்பள்ளி இதற்கு ஒரு நல்ல சான்று. தமிழ் அறவாரியப் பணிக்குழுவின் தொழில்நுட்ப சேவையை முழுமையாகப் பெற்று பயனடைந்த பள்ளிகளில் கடந்த 04 செப்டம்பர் 2023-ஆம் திகதி திறக்கப்பட கோலசிலாங்கூர், ஈஜோக்கில் இருந்து சுங்கை பீலேக் மாற்றப்பட்டது.