மலேசியத் தமிழ் அறவாரியம் தமிழ்க்கல்வி குறித்த மாநாடுகளை இதற்கு முன்னர் இரண்டு முறை (2016 & 2018) வெற்றிகரமாக நடத்தி முடித்தது. அதன் தொடர்ச்சியாக இந்த ஆண்டு மூன்றாவது தமிழ்க்கல்வி வளர்ச்சி மாநாடு 21 டிசம்பர் 2024 அன்று ஆசிய பசிபிக் பல்கலைக்கழகத்தில் சிறப்பாக நடைபெற்றது.
நோக்கம்
- மலேசியாவில் தமிழ்க் கல்வியில் ஏற்படும் முக்கிய சவால்களையும் வாய்ப்புகளையும் கண்டறிதல்.
- தமிழ்க்கல்வியின் தர மேம்பாட்டிற்கான புதிய அணுகுமுறைகளை ஆராய்தல்.
- தமிழ்ப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை மற்றும் அதை தக்கவைப்பதற்கான வழிமுறைகளைக் கண்டறிதல்.
- எஸ்.பி.எம் தேர்வு தமிழ்மொழி, இலக்கியப் பாடமும் எஸ்.தி.பி.எம் தேர்வுத் தமிழ்ப்பாடமும் போதிப்பதில் ஏற்படும் சிக்கல்களுக்கான தீர்வுகளை முன்மொழிதல்.
- இடைநிலைப்பள்ளி மாணவர்களிடையே தமிழ் இலக்கியப் பாடத்தை ஊக்குவித்தல்.