பள்ளி வாரியத்திட்டத்தின் வழி தமிழ் அறவாரியம், தமிழ்ப்பள்ளிகளில் பள்ளி வாரியம் தொடர்பான விழிப்புணர்வு, தமிழ்ப்பள்ளிகளில் வாரியங்கள் அமைத்தல், பள்ளி வாரிய உறுப்பினர்களுக்கு நிர்வாகம், தலைத்துவம் மற்றும் திறன் பயிற்சிகள், மாநாடுகள், வழிகாட்டிகள், தொழில்நுட்ப ஆலோசனைகள் முதலியவற்றை வழங்கிவருகிறது. இதன் வழி தமிழ்ப்பள்ளி நிலம் மற்றும் கட்டடப் பிரச்சனைகள், பள்ளி வசதிகள், குறைந்த மாணவர்கள் கொண்ட பள்ளிகள் இடம் மாற்றுதல், மற்றும் மாணவர்கள் கல்வி முன்னேற்றத்திலும் பள்ளி மேலாளர் வாரியங்கள் செவ்வனே பங்காற்ற முடியும். இன்றைய நாள் வரை தமிழ் அறவாரியம் 400-க்கும் மேற்பட்ட தமிழ்ப்பள்ளிகளில் மேலாளர் வாரியங்களை அமைத்துள்ளது.